by Staff Writer 03-01-2019 | 5:52 PM
Colombo (News 1st) கொடித்தோடை செய்கையை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் தீர்மானத்தின்படி, மொனராகலை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை செய்கையை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திட்டத்தை முன்னிட்டு, செய்கையாளர்களுக்கு 20000 கொடித்தோடை கன்றுகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.