by Staff Writer 13-12-2018 | 9:29 PM
Colombo (News 1st) சம்பள அதிகரிப்பு கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கொட்டகலை - ஸ்டொனிகிளிப் தோட்ட மக்களும் ஹட்டன் - ஸ்டாடன் தோட்ட மக்களும் ஹட்டன் - கெரோலினா தோட்ட மக்களும் இன்று சம்பள அதிகரிப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்டாரவளை - தம்பதென்ன தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
யட்டியந்தோட்டை - மணல்பொல தோட்டத் தொழிலாளர்களும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மெராய தோட்ட மக்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், மன்றாசி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோல்ப்ரூக் - சின்ன தோட்ட மக்கள் டயர்களை எரித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.