by Bella Dalima 13-11-2018 | 8:44 PM
Colombo (News 1st) நாளை (14) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பாராளுமன்றம் கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாளை காலை 8.30 அளவில் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.