by Staff Writer 22-10-2018 | 8:23 AM
Colombo (News 1st) மஹவ - மொரகொல்லாகம பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலொன்று, இன்று (22) அதிகாலை தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலில் பயணித்த பயணிகளை ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.