by Staff Writer 21-10-2018 | 10:44 AM
Colombo (News 1st) மாத்தறை மாவட்டத்தில் தெங்கு பயிரிடப்படும் இடங்களில், ஊடுபயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அன்னாசி, கறுவா, இஞ்சி மற்றும் வெற்றிலை ஆகியன பயிரிடப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக செய்கையாளர்களுக்குத் தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவு வழங்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.