பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்

by Staff Writer 18-10-2018 | 4:23 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். பிரதமருடன் மேலும் 15 பேர் அடங்கிய குழு இந்தியா நோக்கி புறப்பட்டதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை தருவதாக 'தி ஹிந்து' நாளிதழ் அண்மையில் செய்தி வௌியிட்டிருந்தது. இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.