by Staff Writer 07-10-2018 | 9:28 AM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரூடாக விண்ணங்களை அனுப்பி வைக்குமாறு பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தடவை புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்படுமாயின், அது குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் 011-2784 208, 011-2784 537, 011-3188 350 மற்றும் 011-3140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைபாடுகளை முன்வைக்க முடியும்.