by Staff Writer 05-09-2018 | 5:47 PM
Colombo (News 1st) உலக சுகாதார ஸ்தாபனத்தால் ருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.