குசும்தாச, பியதாசவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

குசும்தாச மஹாநாம, பியதாச திசாநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 04-09-2018 | 3:27 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பான வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாமதப்படுத்துவதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் இன்று மன்றில் சுட்டிக்காட்டினர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களினதும் குரல் பதிவை பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. சந்தேகநபர்கள் இந்திய பிரஜை ஒருவரிடம் இலஞ்சம் கோரியமை தொடர்பான தொலைபேசி கலந்துரையாடல் அடங்கிய குரல் பதிவு, மன்றுக்குஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சந்தேகநபர்கள் இருவரும் தமது குரலை மாற்றி அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்று குரல் பதிவு அனுப்பியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் இன்று மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.