சிங்கப்பூர் ஒப்பந்தம் குறித்து ஆராய விசேட குழு

இலங்கை - சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதி விசேட சுயாதீன குழு

by Staff Writer 11-08-2018 | 1:51 PM
Colombo (News 1st) இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட, ஜனாதிபதி விசேட சுயாதீன குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (10) தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயமாக அமைந்தால் இந்த உடன்படிக்கைக்கு எவ்விதத்திலும் ஆதரவளிக்க போவதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதன்காரணமாக, சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று சுட்டிக்காட்டியிருந்தார்.