ஏழு மணித்தியாலத்தில் 40 துப்பாக்கிச்சூடுகள்

சிக்காகோவில் ஏழு மணித்தியாலத்தில் 40 துப்பாக்கிச்சூடுகள்

by Staff Writer 06-08-2018 | 5:05 PM

சிக்காகோவில் 7 மணித்தியாலங்களுக்குள் 40 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சிக்காகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று (05) காலை வரையிலான 7 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குழு மோதல்கள் காரணமாகவே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில் வன்முறைகள் குறைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.