by Staff Writer 05-08-2018 | 7:13 PM
பிபில பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக குறித்த மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுடைய மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் 35 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.