மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 100 பில்லியன் யென் கடன் பெற அமைச்சரவை அனுமதி
by Bella Dalima 04-07-2018 | 10:15 PM
Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கு ஜப்பான் வங்கியொன்றில் இருந்து 100 பில்லியன் யென் கடன் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அதிவேக வீதியின் பொத்துஹெரவில் இருந்து கலகெதர வரையான 32.5 கிலோமீட்டர் வீதியை நிர்மாணிப்பதற்கே இந்த கடன் தொகையைப் பெற தீர்மானித்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.