ஜனாதிபதித் தேர்தலில் தயீப் எர்டோகன் முன்னிலை

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தயீப் எர்டோகன் முன்னிலை

by Chandrasekaram Chandravadani 25-06-2018 | 9:50 AM
துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் (Tayyip Erdogan) முன்னிலை பெற்றுள்ளார். நேற்று நடந்துமுடிந்த தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன . 98 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 53 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தயீப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார். எர்டோகனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு மக்கள் கட்சி வேட்பாளர் முஹாரம் இன்ஸ்சினால் 31 சதவீதமான வாக்குகளையே பெறமுடிந்தது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை தேர்தலின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையால் துருக்கியின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.