by Staff Writer 03-06-2018 | 10:34 PM
5000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க கூடிய அக்னி 5 ஏவுகணை ஒடிசா கடற்கரையில் டொக்டர் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்டுள்ளது
சுமார் 1 தசம் 5 தொன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பபட்டுள்ளது. இது 17 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலம் கொண்டதாகும்
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் அக்னி 5 ஏவுகணையின் ஆறாவது சோதனை இதுவாகும்
ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று காலை சுமார் 9. 48 மணி அளவில் குறித்த ஏவுகணை பரிசோதிதனைக்காக ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி 5 ஏவுகணை நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கினை குறித்த நேரத்தில் தாக்கி அழித்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன