டொரண்டோவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலி

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி

by Staff Writer 24-04-2018 | 11:05 AM
COLOMBO (News 1st) கனடாவின் டொரண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வேனொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். G7 நாடுகளின் அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் பகுதியை அண்மித்த பகுதியில் இந்த சம்பவம இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.