தேங்காய் ஏற்றுமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

தேங்காய் ஏற்றுமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

by Staff Writer 02-04-2018 | 5:18 PM
COLOMBO (News 1st) - தேங்காய் ஏற்றுமதியை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனால் தேங்காய் ஏற்றுமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். பண்டிகை காலத்தை முன்னிட்டு, அத்தியாவசிய உணவுப்பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறைவின்றி மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தரப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் முதல் வருட இறுதி வரை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினூடாக நிர்ணய விலையில் மீனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.