இலங்கை இறப்பருக்கான கேள்வி அதிகரிப்பு

ஸ்லோவேக்கியா கார் உற்பத்தியில் இலங்கை இறப்பருக்கான கேள்வி அதிகரிப்பு

by Staff Writer 29-03-2018 | 10:13 AM
COLOMBO (News 1st) - தமது நாட்டு கார் உற்பத்தியில் இலங்கையின் இறப்பருக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக ஸ்லோவேக்கியா தெரிவித்துள்ளது. உலக இறப்பர் உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளில் முதன்மை நாடாக விளங்கும் இலங்கையை, தமது நாட்டின் நான்கு சக்கர வாகனங்களின் உற்பத்தியில் இணைத்து கொள்வதற்கும் ஸ்லோவேக்கியா யோசனை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஸ்லோவேக்கியாவுக்கிடையிலான வர்த்தக உடன்படிக்கை 45.07 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.