சுதந்திரக் கிண்ண 20இற்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று

சுதந்திரக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

by Staff Writer 06-03-2018 | 9:39 AM
COLOMBO (News 1st) - இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது. இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சுதந்திரக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு, இலங்கை குழாம் தயாராகவுள்ளதாக, அணியின் பிரதம பயிற்றுனர் ச்சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளதார். இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.