விமானப்படையின் சைக்கிளோட்டம் நிறைவடைந்தது

விமானப்படையின் சைக்கிளோட்டப் பந்தயம் நிறைவடைந்தது

by Staff Writer 04-03-2018 | 4:47 PM
COLOMBO (News 1st) - விமானப்படையின் 19 ஆவது வருடாந்த மாபெரும் சைக்கிள் பந்தயம் இன்று நிறைவுக்கு வந்தது. இன்று காலை பொலன்னறுவையிலிருந்து ஆரம்பித்த சைக்கிள் பந்தயம், அம்பாறையில் நிறைவடைந்தது. பந்தயத்தில், விமானப்படையின் சமந்த லக்மால் முதலிடத்தையும், இராணுவப்படையைச் சேர்ந்த சரித் பெர்ணான்டோ இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தை துறைமுக அதிகார சபையின் சஜித் அசங்க பெற்றுக் கொண்டனர். இலங்கை விமானப்படையின் 67 ஆவது ஆண்டு பூர்த்திக்கு இணையாக நடத்தப்படும் 19 ஆவது வருடாந்த மாபெரும் சைக்கிள் பந்தயம் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்த சைக்கிள் பந்தயத்திற்கு ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் ஊடக அனுசரணை வழங்குகின்றது.