நெல்லியடியில் கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

நெல்லியடியில் கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

by Bella Dalima 02-03-2018 | 3:18 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் கேரளக் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (01) மாலை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 10 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நெல்லியடி, ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.